ஓய்வு பெற்ற டிஜிபி முகர்ஜி காலமானார்: உயரதிகாரிகள் நேரில் அஞ்சலி

சென்னை: தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வுபெற்ற முகர்ஜி நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு உயர் காவல் துறை அதிகாரிகள் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சென்னை மணப்பாக்கம் ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பை சேர்ந்தவர் முகர்ஜி(75).

தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தமிழகம் முழுவதும் பல்ேவறு பகுதிகளில் பணியாற்றி உள்ளார். பிறகு, 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். டெல்லியில் சிபிஐயில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர், முதுமை காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. முகர்ஜி உடலுக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: