புதுடெல்லி: குஜராத்தில் திடீரென ரயில்வே தண்டவாளத்தில் புகுந்த எருமைகள் மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்தது. மும்பை சென்ட்ரல் - குஜராத் காந்தி நகர் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில், குஜராத்தில் நேற்று காலை 11.20 மணியளவில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்த போது திடீரென எருமைகள் தண்டவாளத்தில் கூட்டமாக புகுந்தன. இதனால், அவற்றின் மீது ரயில் மோதியது. இதில், ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்தது.