புதுடெல்லி: எவ்வித சமாதான முயற்சிக்கும் இந்தியா உதவ தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசிய போது உறுதியளித்தார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் குறித்து பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார்.