கருங்கல்: கருங்கல் அருகே கொல்லஞ்சி, மாவிளை பகுதியில் ஒரு வீட்டின் அருகாமையில் தோட்டம் உள்ளது. இதில் ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவை வெளியே செல்லாமல் இருக்க தோட்டத்தை சுற்றி வலையால் ஆன வேலி போடப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அந்த வலையில் சுமார் 6 அடி நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று வலையில் சிக்கி கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கொல்லஞ்சி பஞ்சாயத்து தலைவர் சலோமிக்கு தகவல் கொடுத்தனர்.