தமிழகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு பள்ளி வளாகத்தில் ஓர் அடர்வனம்!: காய்கறி தோட்டம், மூலிகை பண்ணை என அசத்தும் ஆசிரியர்கள்..!! Jun 21, 2021 ஈரோடு மாவட்டம் பாருதுரா அரசு பள்ளி வளாகம் காய்கறித்தோட்டம் மூலிகைப் பண்ணை அற்புதம் ஆசிரியர்கள் ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பள்ளி வளாகத்தில் ஏராளமான மரங்கள், செடிகள் கொடிகளை பராமரித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர். அள்ளிக்குளம், காய்கறி தோட்டம், மூலிகை பண்ணை, அழகிய பூஞ்சோலை என்று பள்ளி வளாகமே அடர் வனமாக காட்சியளிக்கிறது. பள்ளி எப்போது திறக்கப்பட்டாலும் மாணவர்களை வரவேற்க துளியும் பசுமை மாறாமல் காத்திருக்கிறது பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் பசுஞ்சோலை. ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரின் மையத்தில் இருக்கிறது அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி . வாகன போக்குவரத்து மிகுந்த பிராதான சாலையை கடந்து பள்ளிக்குள் நுழைந்தாலே அடர்ந்த வனத்துக்குள் நுழைந்த பிரம்மிப்பை தருகிறது பள்ளி வளாகம். 10 ஆண்டுகளுக்கு முன் சுமார் 200 மரங்கள் மட்டுமே இருந்த பள்ளி வளாகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் ஓங்கி வளர்ந்து உயர்ந்து நிற்கின்றன. விருப்பமுள்ள சக ஆசிரியர்களையும் சேர்த்து குழுக்கள் அமைந்து சுயற்சி முறையில் பள்ளி வளாகத்தில் உள்ள வனப்பகுதியை பராமரிக்கும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், களைப் பறித்தல், கவாத்து செய்தல் என்று தொடர்கிறது அவர்களின் களப்பணி. வேளாண்மை ஆசிரியர் கந்தன் மற்றும் சக ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் செம்மையான உழைப்பால் பள்ளியின் இயற்கை சூழல் உயிர்ப்புடன் இருக்கிறது. பெருந்துறை அரசு மேனிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடர்வனத்தில் அள்ளிக்குளம், காய்கறி தோட்டம், மூலிகை பண்ணை, தெய்வீக மரங்கள், அழகிய பூஞ்சோலை, உயிர்வல்லி சோலை, மியாவாகி அடர்வனம் என்று ஒரு பெறுவனத்தின் அத்தனை அம்சங்களும் உள்ளன. பள்ளி கட்டிடமும், மைதானமும் போக எஞ்சிய எட்டரை ஏக்கரில் சோலைவனமாக பள்ளி வளாகம் காட்சி தருகிறது. … The post ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு பள்ளி வளாகத்தில் ஓர் அடர்வனம்!: காய்கறி தோட்டம், மூலிகை பண்ணை என அசத்தும் ஆசிரியர்கள்..!! appeared first on Dinakaran.
500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த விவசாயி, தொழிலாளியின் மகள்கள்; கலெக்டர் ஆவதே லட்சியம் என பேட்டி
பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து எரிசக்தி அமைப்பு தொடர்பான புதிய முதுகலை படிப்பு: சென்னை ஐஐடி தொடங்கியது
வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் உரிய அனுமதிகளை பெற்றே வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு வரும் 14ம் தேதி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கவுள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் : வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!!