கயத்தாறு: கடம்பூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகாவில் உள்ள கடம்பூர் பேரூராட்சியின் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மற்ற 9 வார்டுகளுக்கு தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. வார்டுகளில் திமுக சார்பில் 7 வேட்பாளர்களும், காங்கிரஸ், மதிமுக சார்பில் தலா ஒரு வேட்பாளரும், பாஜ சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேச்சைகள் 13 பேர் என மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.