தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக மான்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த பகுதியை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளதால் இரை தேடி மான்கள் வந்து செல்கின்றன. சில மாதங்களுக்கு முன் 2 மான்கள் கம்பி வேலியில் சிக்கிய நிலையில் பொதுமக்கள் மீட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு வயதான பெண் மான், மைக்கேல்பட்டி கிராமத்துக்குள் நேற்று புகுந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த நாய்கள் துரத்தி மான் குட்டியை கடித்து குதறியது.
