புதுடெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக, தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால் நீண்ட காலமாக இருந்து வருகிறார். 91 வயதான இவருக்கு கடந்தாணடு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவருடைய இந்த பதவிக்காலம் நாளையுடன் முடிகிறது. அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க ஒன்றிய அரசு விரும்பிய போதிலும், வயது மூப்பு காரணமாக வேணுகோபால் அதை ஏற்க மறுத்து விட்டார்.
இதையடுத்து, ஒன்றிய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஙர் வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார்.