குயில்பவுட்: உலக கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் - துனிசியா அணிகள் நேற்று மோதின. பிரான்சின் பாரிஸ் பிரின்சஸ் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் பிரேசில் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. 2வது கோலை அடித்த பிரேசில் வீரர் ரிச்சர்லிசன், அதைக் கொண்டாட கார்னர் பகுதிக்கு சென்றார். அப்போது கேலரியில் இருந்து ரசிகர் ஒருவர் ரிச்சர்லிசன் மீது வாழைப் பழத்தை வீசியுள்ளார்.