கம்பம் : சுருளி அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால், நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தர்ப்பணம் செய்ய குவிந்தனர்.தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. இறந்த முன்னோர்களுக்கு திதி, மற்றும் ஆத்ம சாந்தி வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு வருகின்றனர். சுருளி அருவிக்கு ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதியில் இருந்து ஊற்று தண்ணீரும், ஹைவேவிஸ் அணை பகுதியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த ஆக. 2 முதல் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.