காரைக்கால்: காரைக்கால் அடுத்த மீனவ கிராமமான கிளிஞ்சல் மேடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஆட்சியம்மாள்(62). மீன்விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மருமகளும், 4 பேத்திகளும் உள்ளனர். வடிவேலின் தம்பி சுப்பிரமணி, காத்தம்மாள் தம்பதியின் மகன் தீபமணியை (28) சிறுவயது முதல் வடிவேல், ஆட்சியம்மாள் தம்பதி வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9 மாதத்திற்கு முன் வேலை சம்பந்தமாக ஒரு தனியார் நிறுவனம் மூலம் துபாய்க்கு வேலைக்கு சென்ற தீபமணி, அங்கு 6 மாதம் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.