காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் உள்ள மீன்கள் வெளியேறாமல் இருக்க மக்கிலியன் கால்வாயில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலாற்றில் இருபக்கமும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. எனவே, பாலாற்றில் இருந்து வரும் தண்ணீரை ஆங்காங்கே உள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியும் நிரம்ப தொடங்கி உள்ளது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளும் நிரம்பி வழிய தொடங்கி உள்ளது.