புதுடெல்லி, செப். 24: கடற்படைக்கு ரூ.1,700 கோடி செலவில் 35 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளும் நவீனமயங்கள், கூடுதல் ஆயுதங்களுடன் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு, வெளிநாடுகளில் இருந்தும் நவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் எஸ்-400 போன்ற ஏவுகணை தடுப்பு சாதனங்களும் இதில் அடங்கும். இந்நிலையில், கடற்படைக்கு 35 கூடுதல் பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன. இந்திய - ரஷ்யா கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கப்படுகிறது.