சென்னை: அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில், காங்கிரசார் மேற்கொள்ளும் நடைபயணத்தை வரும் 25ம் தேதி கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி பாதுகாப்பு வழங்கப்பட்ட தலித்துகள், சிறுபான்மையினர், பின்தங்கிய சமுதாயத்தினர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக, உ.பி.யில் அடக்குமுறைக்கு ஆளாகி பலரது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. 19 வயது தலித் பெண் காவல்துறையினரால் பலவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை.