ஆளவந்தார் நாயக்கர் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அறக்கட்டளை வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது

செங்கல்பட்டு: ஆளவந்தார் நாயக்கர் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அறக்கட்டளை வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் மாமல்லபுரம் ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் திருப்போரூர் வட்டம், சூளேரிக்காட்டு கிராமம் சர்வே எண் 262 / 2-ல் 1 எக்கர் 52 சென்ட் விஸ்தீரணம் கொண்ட நிலம் அமைந்துள்ளது.

இந்த நிலத்தில் வருணா இன் ஹோட்டல், VN CITY GLOBAL Hotel, மற்றும் 13 நபர்கள் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் அணுகுபாதையாக பயன்படுத்தி ஆக்கிரமிருப்பில் இருந்து வந்த இடத்தினை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படியும், சட்டப்பிரிவு 78 யின்படி தொரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பின் படியும் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் திருமதி வான்மதி அவர்கள் உத்தரவின்படி இன்றைய தினம் செங்கல்பட்டு உதவி ஆணையர் அவர்களால் அறக்கட்டளை செயல் அலுவலர், சரக ஆய்வர்கள், சிறப்பு பணி செயல்அலுவலர்கள், வருவாய் துறை முன்னிலையில் மற்றும் காவல் துறை பாதுகாப்புடன் அறக்கட்டளை வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. மேற்படி சுவாதீனம் எடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு 7.5 கோடி ஆகும்.

Related Stories: