கண்ணாடியை அணிந்து கொண்டு அசால்டாக கால்பந்தை உதைத்து விளையாடிய எம்பி: சமூக வலைதளங்களில் பாராட்டு

கொல்கத்தா: கண்ணாடி அணிந்தும், சேலை கட்டிய நிலையில் கால்பந்தை அசால்டாக உதைத்து விளையாடிய எம்பி மஹுவா மொய்த்ராவை பலரும் பாராட்டி உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும், ஆளும் பாஜகவுக்கு எதிராக கருத்துகளை வெளியிடுவதற்கும் புகழ் பெற்றவர் ஆவார். அவர் கொல்கத்தாவில் நடந்த கால்பந்து நிகழ்ச்சி தொடக்க விழாவில் பங்கேற்றார்.

விழாவை தொடக்கி வைக்கும் போது, சேலை அணிந்த நிலையில் இருந்த மஹுவா மொய்த்ரா, கண்ணாடி அணிந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக கால்பந்தை அசால்டாக உதைத்து விளையாடினார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், ‘2022 கிருஷ்ணாநகர் எம்பி கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அப்போது எனது வேடிக்கையான தருணங்கள்.

ஆம், நான் சேலையில் விளையாடினேன்’ என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரது புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. விளையாட்டின் மீதான அவரது ஆர்வத்தை பெரும்பாலானோர் பாராட்டியுள்ளனர்.

Related Stories: