கொழும்பு: நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை 8 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து நேற்று காலை 87 விசை படகுகளில் 400க்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான படகில் அவர் உள்பட 8 பேர் 22 நாட்டிகள் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.