புழல்: புழல் ஒற்றைவாடை தெருவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலின் குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.