வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்காக வழிமுறைகள் வகுக்க டிடிவி கோரிக்கை

சென்னை: வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் ஏமாற்றப்படாமல் இருக்க சரியான வழிமுறைகளை வகுத்திட வேண்டும் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சித்ரவதைக்கு ஆளான தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பேசும் காணொளியைப் பார்க்கும் போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. அதனால் தான், வெளிநாட்டு வேலைகளில் தமிழர்கள் யாரும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கு சரியான வழிமுறைகளை வகுத்திட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: