தாம்பரம்: தாம்பரம், கடப்பேரி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து பணிமனையில் கான்கிரீட் தரை அமைத்து தர வேண்டும் என, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா நேற்று முன்தினம் கான்கிரீட் தரையை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.