திருக்கோவிலூரில் பிரபல நகைக்கடையில் 75 சவரன் நகை, 40 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: திருக்கோவிலூரில் பிரபல நகைக்கடையில் 75 சவரன் நகை, 40 கிலோ வெள்ளி பொருட்கள் திருடி  சென்றுள்ளனர். நிதேஷ் என்பவர் நேற்று நள்ளிரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இன்று காலை பணியாளர்கள் வழக்கம்போல் கடைய திறந்தபோது நகைகள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், டி.எஸ்.பி பழனி, ஆய்வாளர் பாபு நகைக்கடையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: