கமுதி: கமுதி அருகே கோயில் விழாவில் பக்தர்கள் சாக்கு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி மாத பொங்கல் விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. நிறைவு நாளான நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம், சேறு பூசி, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் சாக்கு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.