நீதிமன்றத்தில் போராடும் அதிமுக: டிடிவி. தினகரன் பேட்டி

கோவை: எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் ஒரு சிலரின் ஆணவத்தால் சிக்கி தவிக்கிறது என டிடிவி தினகரன் கூறினார். கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுகவில் நடக்கும் கூத்தை பற்றி பதில் சொல்ல வேண்டியதில்லை. அது நீதிமன்றத்தில் போராடி கொண்டு இருக்கின்றது. தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிகாத்த இயக்கம் ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் சிக்கி தவிக்கிறது. இதற்கு காலம் பதில் சொல்லும். எந்த மொழியையும், எந்த மாநிலத்திலும் திணிக்கக்கூடாது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களாக விரும்பி ஏற்று கொள்ளாமல், திணித்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றார்.

Related Stories: