கோபன்ஹேகன்: ஸ்வீடன் நாட்டில் 3 ஓட்டு வித்தியாசத்தில் எதிர்க்கட்சிகள் வென்றதால் பிரதமர் மேக்தலீனா ஆன்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் உள்ள 349 இடங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இதில், வலதுசாரி கட்சிகளான தேசியவாத கட்சி, குடியுரிமை எதிர்ப்பு கட்சி 176 தொகுதிகளிலும் இடதுசாரியான ஆளும் சோசலிச ஜனநாயக கட்சி 173 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, நாடாளுமன்ற சபாநாயகர் ஆன்ட்ரியாஸ் நோர்லெனை சந்தித்த பிரதமர் மேக்தலீனா, தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.