குன்னூர்: குன்னூரில் நூற்றாண்டு பழமையான கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தை காலி செய்ய கூறி மிரட்டுவதாக கூறி கிறிஸ்தவ மக்கள் ஆர்ப்பாட்டம் ெசய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதியில் 105 வருட காலமாக கிறிஸ்தவ மக்களின் பார்ப்பரம்மாள் குருசடி திருச்சபை உள்ளது. இங்கு அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். சமீபகாலமாக, ஒரு சிலர் இந்த ஆலயத்தை விலைக்கு வாங்கி விட்டதாக சொல்லி காலி செய்யுமாறு தொந்தரவு செய்து வருகின்றனர்.