பிரேசிலியா: வனப்பகுதியில் 300 அடி உயரத்தில் 2 பாறைகளுக்கு இடையே நிர்வாண நிலையில் இருந்தவரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். பிரேசில் நாட்டின் மெஸ்ட்ரி அல்வேரோ வனகாப்பகத்தில் சுற்றித் திரிந்த ஒருவர், உயரமான இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே உள்ள குறுகிய சந்தில் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து அழுது கொண்டு கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். கிட்டதட்ட 300 அடி உயரத்தில் இருந்த பாறையின் இடையே அவர் நின்றிருந்த தகவல் பிரேசில் அரசுக்கு தெரியவந்தது. அதையடுத்து பிரேசிலிய விமானப்படையின் மேஜர் பாப்லோ ஏஞ்சலி மார்க்வெஸ் தலைமையிலான படையினர், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்த அந்த நபரை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.