இந்து அறநிலையத்துறை சார்பில் சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேக பணி துவக்க விழா: எம்எல்ஏ, அரசு அதிகாரி பங்கேற்பு

புழல்: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புழல் சுப்பிரமணியசாமி கோயிலில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி துவக்க விழா கோயில் வளாகத்தில் நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், இந்து அறநிலைத்துறை நிர்வாக அதிகாரி குமரன், முன்னாள் அறங்காவலர் ஜெ.ரவி, 24வது வட்ட திமுக பொறுப்பாளர் சுந்தரேசன் மற்றும் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புழல் சுப்பிரமணியசாமி கோயில் புணரமைக்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என, இந்து அறநிலைத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: