பாரமுல்லா: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடந்த மாதம் 26ம் தேதி கட்சியில் இருந்து விலகினார். ஜம்மு காஷ்மீரில் இவர் புதிய கட்சி தொடங்க உள்ளார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆசாத் பேசியதாவது: இன்னும் 10 நாளில் புதிய கட்சி அறிவிப்பேன். என்னுடைய கட்சி நண்பர்கள் புதிய கட்சிக்கு ஆசாத் என பெயரிட வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு நான் மறுத்து விட்டேன். புதிய கட்சியின் கொள்கைகள் சுதந்திரமானதாக இருக்கும். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க செய்வதே கட்சியின் முக்கிய குறிக்கோள்.ஓட்டுக்காக மக்களை தவறாக வழி நடத்துவதை நான் விரும்பவில்லை.