ஊட்டியில் கல்லறை கட்டுவதற்தாக கோவையில் புதைத்த தந்தை சடலத்தை தோண்டி எடுத்த மகன்

கோவை: கோவை துடியலூர் அருகே வடமதுரையை சேர்ந்தவர் ரிச்சர்ட் அசரியா. வயது மூப்பினால் கடந்த ஜூன் 12ம் தேதி இறந்தார். தொப்பம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு கல்லறை கட்ட அனுமதி கிடைக்கவில்லை. ஊட்டியில் இவர்களது குடும்பத்தினர் உறுப்பினராக உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்து கல்லறை கட்ட அனுமதி கிடைத்தது. ரிச்சர்ட் அசரியாவின் உடலை தோண்டி எடுத்து ஊட்டிக்கு எடுத்து செல்ல அனுமதி கேட்டு அவரது மகன் பிரவீன் சாமுவேல் கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதுதொடர்பாக பலகட்ட விசாரணைக்கு பின் சடலத்தை தோண்டி எடுக்க வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி கிடைத்தது.இதையடுத்து, 3 மாதங்களுக்கு பின்பு நேற்று வருவாய், காவல் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் முன்பு உடல் தோண்டி எடுக்கப்பட்டு, ஊட்டி கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: