கொழும்பு: இலங்கையில் 37 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர் இதில், ராஜபக்சேக்களின் அண்ணன் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்தும், கோத்தபய அதிபர் பதவியில் இருந்தும் விலகினர். மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என 51 நாட்கள் நாடு நாடாக சுற்றிய கோத்தபய, கடந்த வாரம் நள்ளிரவில் இலங்கை திரும்பினார். இந்நிலையில், அதிபராக உள்ள ரணில் தலைமையில் அனைத்து கட்சி கூட்டாட்சி அமைக்கப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இலங்கை அமைச்சரவை 37 புதிய இளம் தலைமுறை அமைச்சர்களுடன் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.