பல்லாரி: கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம், சிறுவாரா கிராமத்தை சேர்ந்த சிறுவன் சுரேஷ் (10). இவர் தனது நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்றான். நீச்சல் தெரியாத சுரேஷ், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர்கள், ‘எனது மகன் இறக்கவில்லை. அப்படியே இறந்திருந்தாலும் உப்பை கொட்டி உடலை மூடிவைத்தால் உயிர் பிழைத்து விடுவான்,’ என்று கூறி, 5 மூட்டை உப்பை கொண்டு வந்து சிறுவனின் தலையை மட்டும் விட்டு உடல் மீது போட்டனர்.