தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 445 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,834 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,71,924 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81, செங்கல்பட்டு 36, கோவை 59, ஈரோடு 24, கிருஷ்ணகிரி 12, சேலத்தில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 38,038 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 35,28,941 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,945 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: