சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,834 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,71,924 ஆக அதிகரித்துள்ளது.