கோவை: பொள்ளாச்சி அருகே மாமனாருக்கு மதுவில் சைனைடு கலந்து கொடுத்து கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே சூளுரை சேர்ந்த மனோகர் மற்றும் கந்தசாமி என்கிற வேலுசாமி ஆகியவர்கள் மது அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.