பொள்ளாச்சி அருகே மாமனாரை கொன்ற மருமகன் கைது!: சொத்து தகராறில் மதுவில் சைனைடு கலந்து கொன்றது அம்பலம்..!!

கோவை: பொள்ளாச்சி அருகே மாமனாருக்கு மதுவில் சைனைடு கலந்து கொடுத்து கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே சூளுரை சேர்ந்த மனோகர் மற்றும் கந்தசாமி என்கிற வேலுசாமி ஆகியவர்கள் மது அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் உயிரிழந்த இருவரில் மனோகரன் என்பவருடைய மருமகன் சத்யராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுவில் சைனைடு கலந்து கொடுத்து மாமனாரை கொன்றது தெரியவந்திருக்கிறது. அண்மையில் தனக்கு சொந்தமான நிலத்தை 40 லட்சம் ரூபாய்க்கு மாமனார் மனோகரன் விற்பனை செய்ததும், அதில் ஒரு ஆட்டோவை வாங்கியது போக, எஞ்சிய பணத்தை அவர் செலவு செய்திருப்பது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாமனாரை கொன்றதாக சத்யராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories: