உடுமலை : உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் காரணமாக முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு தினசரி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருவியில் தவறாமல் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.