கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட 47 கிராம மக்களின் தாகம் தீர்த்த ஜக்கனாரை ஊராட்சி

கோத்தகிரி :  கோத்தகிரி மக்களின் அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஊராட்சியை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஜக்கனாரை ஊராட்சி. இங்கு 15 வார்டுகளை உள்ளடக்கி 47 கிராமங்கள் உள்ளன. ஜக்கனாரை ஊராட்சி மன்ற தலைவராக சுமதி சுரேஷ், துணை தலைவராக ஜெயந்தி ஆகியோர் உள்ளனர். ஜக்கனாரை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளான அரவேனு, ஜக்கனாரை, சக்கத்தா, அண்ணா நகர், குண்டூர் காலனி, தொத்தமுக்கை, கெரடா மற்றும் அரவேனு சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளை முன்னெடுத்து, அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு நோக்கில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி பெரிய சோலை வனப்பகுதியில் இருந்து இயற்கை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், குறிப்பிட்ட சில காரணங்களால் குடிநீர் குழாய் சீரமைப்பு, நீர்தேக்க தொட்டி, தொலைதூரத்தில் இருந்து தண்ணீர் வர சிரமம் போன்ற காரணங்களால் குடிநீர் விநியோகம் 15 ஆண்டு முன்பு ஜக்கனாரை கிராமத்திற்கும், 25 ஆண்டுகளுக்கு முன்பு சக்கத்தா கிராமத்திற்கும் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடியது.

ஜக்கனாரை ஊராட்சி மன்றத்தலைவர் சுமதி சுரேஷ் பல்வேறு முயற்சிகள் எடுத்து மீண்டும் இயற்கையான முறையில் உருவாகும் சோலை குடிநீர் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்து சக்கத்தா கிராமத்திற்கு குழாய் வழியாக பெரியாசலை வனப்பகுதியில் இருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டது. ஜக்கனாரை கிராமத்திற்கும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து  11 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

கோத்தகிரி பெரிய சோலை வனப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலிருந்து குடிநீர் குழாய்கள் அமைத்து சக்கத்தா, ஜக்கனாரை கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில்தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் மக்களின் முக்கிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

வாரம் மூன்று நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட கிராமத்திற்கு தற்போது 24 மணி நேரமும் எந்தவித தட்டுப்பாடும் இன்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலமாக அரவேனு பகுதியில் 21.50 லட்சம் மதிப்பில் பொதுக்கிணறு,மேட்டுப்பாளையம் சாலையில் பதினைந்தாவது நிதிக்குழு மூலம் 9 லட்சம் மதிப்பில் பொது கிணறு அமைக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற பொது நிதியியல் இருந்து தொத்தமுக்கை, ஜக்கனாரை,கெரடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் கம்பங்கள், கழிவுநீர் கால்வாய் சீர்செய்யப்பட்டுள்ளது.  ஜக்கனாரை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளை உள்ளடக்கிய 47 கிராமங்களுக்கும் ஜக்கனாரை ஊராட்சி மன்றத்தின் மூலம் அடிப்படை வசதி, கழிவுநீர் கால்வாய், நடைப்பாதை சேதம் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பதினைந்தாவது நிதிக்குழு மாளியம் மூலமாக ரூபாய் 88 லட்சம் ஒதுக்கப்பட்டு கிராமப்புற அடிப்படை வசதிகளான நடைப்பாதை, கழிவுநீர் கால்வாய், தடுப்புச்சுவர் கட்டும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மாவட்டத்தில் 19 வகையான  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம்,  இலவச ஏடிஎம் இயந்திரம், காலை மாலை என இரு வேளையும் தூய்மை பணி போன்ற பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.  மாணவர்களின் நலன் கருதி வேறு தீங்கான பாதையில் செல்லாதவாறு வார விடுமுறை நாட்களில் சதுரங்கம் விளையாட்டு பயிற்ச்சியும் அளிக்கப்படுகிறது. ஜக்கனாரை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சுரேஷ், துணை தலைவர் ஜெயந்தி மற்றும் 15 வார்டு உறுப்பினர்களின் உதவியோடு 47 கிராம பொதுமக்களிடம் ஒரு நன் மதிப்பைப் பெற்றுள்ளது ஜக்கனாரை ஊராட்சி மன்றம்.

Related Stories: