வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு, முன்னதாக கோயில் வளாகத்தின் அருகே யாகசாலை அமைத்து கணபதி பூஜை, லஷ்மி, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, சூரிய பூஜை என பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கலச நீர் சிவாச்சாரியார்களால் கோயில் வளாக முழுவதும் பவனி வந்து கோபுரங்கள் மீது புனித நீர் ஊற்றி, தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது.