அகத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு, முன்னதாக கோயில் வளாகத்தின் அருகே யாகசாலை அமைத்து கணபதி பூஜை, லஷ்மி, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, சூரிய பூஜை என பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கலச நீர் சிவாச்சாரியார்களால் கோயில் வளாக முழுவதும் பவனி வந்து கோபுரங்கள் மீது புனித நீர் ஊற்றி, தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது.

இதனை காண வென்குடி, கீழ் ஒட்டிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும், மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெண்குடி கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Related Stories: