காரைக்குடி: பிரான்ஸ் இளம்பெண்ணுக்கும், காரைக்குடி வாலிபருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் பிரான்சில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கலைராஜன் (31). இவர் பிரான்சில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்போது, அதே கல்லூரியில் சைக்காலஜி படித்த கெய்ல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டினர்.