காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அருகே தற்கொலை படை தீவிரவாதி நடத்திய குண்டு வெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 2 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் நுழைவாயில் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் இரண்டு ரஷ்ய தூதரக ஊழியர்கள் 2 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளது.