தேனி: தேனி அருகே உள்ளது பழனிசெட்டிபட்டி பேரூராட்சி. இப்பகுதியில் செல்லும் சாலையின் நடுவே சுமார் ஒரு அடி உயரம் உள்ள தரைமட்ட மைய தடுப்புச்சுவர் இருந்தது. இதனை சுமார் 4 அடி உயரம் உள்ள மைய தடுப்புச்சுவராக மாற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. மாற்றி அமைக்கப்படும் மைய தடுப்பு சுவரில், கொட்டக்குடி பாலத்தில் இருந்து போடி விலக்கு வரை 15 இடங்களில் வாகனங்கள் சாலையை கடக்கும் வகையில் வழி இருந்தது. ஆனால் தற்போது அமைக்கப்படும் மைய தடுப்புச்சுவரால் குறைந்த எண்ணிக்கையில் சாலை திறவிடங்கள் அமைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள், நடைபாதை பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.