கேப் கார்னிவெல்:அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, முதல்முறையாக கடந்த 1969ம் ஆண்டு, ‘அப்போலோ’ விண்கலத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. தற்போது, 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அது ஈடுபட்டுள்ளது. இதற்காக, 322 அடி நீளமுள்ள ஆர்டெமிஸ்-I என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. முதல் கட்டமாக இதை மனிதர்கள் இல்லாமல் நிலவுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. இது வெற்றி பெற்றால், அடுத்த முயற்சியில் மனிதர்கள் அனுப்பப்பட உள்ளனர். இந்நிலையில், இந்த ராக்கெட்டை கடந்த மாதம் 29ம் தேதி விண்ணில் செலுத்த முதல்முறையாக முயற்சி செய்யப்பட்டது.