பாரிஸ்: பிரேசிலின் அடர்ந்த வனமான அமேசான் காட்டில், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் பல ஆண்டாக தனியாக வசித்து வந்தார். தனது உறவுகளை இழந்த அவர் வெளி மனிதர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார். அவரது பெயர் என்ன, என்ன மொழி பேசுவார் என எந்த தகவல்களும் யாருக்கும் தெரியாது. உலகின் தனிமை மனிதர் என அழைக்கப்பட்ட அவர், அமேசான் காட்டில் பொலிவியா எல்லையில் உள்ள ரோன்டோனியா மாகாணத்தின் தனாரு பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார். அவர், மேன் ஆஃப்தி ஹோல் என்று அழைக்கப்பட்டார். அதாவது, நிலத்தின் அடியில் குழிதோண்டி அதில் அந்த கடைசி மனிதர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 60 வயதான நிலையில் அந்த பூர்வ பழங்குடியினத்தவர் மரணமடைந்துள்ளார்.