கள்ளக்குறிச்சி வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஸ்ரீமதி மரணத்தின் பின்னணியில் பலாத்காரமும் இல்லை, கொலையும் இல்லை, தற்கொலை தான் என நீதிமன்றம் கூறியிருந்தது. ஜாமின் வழக்கு விசாரணையில், ஸ்ரீமதி மரணம் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து முறையீடு செய்ய போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: