ரீவா: மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலில் 2,000 பன்றிகள் உயிரிழந்துள்ளன. அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்கா வகை பன்றிக்காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான பன்றிகள் உயிரிழந்தன. மேலும் திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் இந்த பன்றிக்காய்ச்சல் பரவி வந்தது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்திலும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள ரீவா நகரில் மட்டும் கடந்த 2 வாரங்களில் 2000க்கும் மேற்பட்ட பன்றிகள் திடீரென உயிரிழந்தன.