கோத்தகிரி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை சூழலில் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடிய ஹான்பில் என கூறப்படும் இருவாட்சி பறவைகள் வாழ்ந்து வந்தாலும், இந்த பறவைகள் எண்ணிக்கை கடந்த காலங்களில் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கீழ் கோத்தகிரி, கரிக்கையூர் வனப்பகுதியில் அமைந்துள்ள இயற்கை காடுகளில் தற்போது இருவாட்சி பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.