சென்னை: தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் என்பது மிகையான செய்தி என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை: கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில செய்திகள் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 22ம் தேதியன்று 7 கொலைகளும், 23ம் தேதியன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை.