டெல்லி: டெல்லியில் நள்ளிரவில் ஜெ.ஜெ காலனியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட முன்விரோதம் காரணமா? என்பது தெரியவில்லை. எனினும் துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்த குடியிருப்பு வாசிகள் போலீஸ் மற்றும் அவசர மருத்துவ சேவைக்கு செல்போனில் அழைப்பு விடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிசூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பியவர்கள் யார்? என்பது குறித்து டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.