ஜெய்பூர்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால், தனது தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அப்போது முதல் இடைக்கால தலைவராக சோனியா பதவி வகிக்கிறார். அவருக்கும் உடல் நல பாதிப்பால் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. இதனால், ராகுல் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமென மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ராகுலைப் பொறுத்த வரையில் இன்னமும் அவரது மனநிலையை மாற்றிக் கொள்ளவில்லை என இவர்களில் சிலர் கூறுகின்றனர்.