புதுகை சிறையில் கைதி திடீர் சாவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை(52). தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாகக்கூறி சின்னதுரையை காரையூர் போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை சிறையில் கடலை சாப்பிட்டுள்ளார். அப்போது சின்னத்துரைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிறைக்காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சின்னதுரை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: