திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, வழுக்கு மரம் ஏறும் உற்சவம், உறியடி திருவிழா நேற்று நடைபெற்றது. கோயிலுக்கு எதிரே உள்ள நாத நீராஞ்சன மேடையின் அருகே அமைக்கப்பட்டிருந்த 20 அடி உயர கம்பத்தில் எண்ணெய் பூசப்பட்டு கம்பத்தின் மீது இருந்த பரிசு பொருட்களை எடுக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், உள்ளூர் இளைஞர்கள், பொதுமக்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழுக்கு மரம் ஏறி பரிசு பொருட்களை எடுத்தனர்.
