ஈரோடு அருகே கொடிய விஷம் கொண்ட கோதுமை நாகம் கடித்து பெண் பொறியாளர் பரிதாப உயிரிழப்பு..!!

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே கோதுமை நாகம் என்ற கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்து பெண் பொறியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரகுநாதன். டி.என்.பி.எல். காகித ஆலையில் பொறியாளராக உள்ள ரகுநாதன் மனைவி, பொறியாளர் திவ்யபாரதி. இவர்களுக்கு புகழ் என்ற 3 வயது மகன் உள்ளார். வீட்டின் சுற்றுச்சுவர் அருகே தண்ணீர் குழாயினை திறக்க சென்ற திவ்யபாரதிக்கு ஏதோ ஊசி குத்தியது போல் வலி ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பூச்சி கிடைத்திருக்கலாம் என நினைத்த அவர் அருகில் கணபதிபாளையம் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அறிகுறிகளை பார்த்த மருத்துவர் பாம்பு கடித்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை ஈரோடு அழைத்து சென்றனர். அதேநேரம் பாம்புபிடியர் யுவராஜை அழைத்து வீட்டின் அருகே தேடியபோது திவ்யபாரதியை கடித்த பாம்பு சுவர் ஓட்டையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பாம்பை பிடித்த யுவராஜ் அது வீரிய விஷம் கொண்ட கோதுமை நாகம் என கூறியுள்ளார். இதனிடையே சிகிச்சை பலனின்றி பொறியாளர் திவ்யபாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: