ஈரோடு: மொடக்குறிச்சி அருகே கோதுமை நாகம் என்ற கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்து பெண் பொறியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரகுநாதன். டி.என்.பி.எல். காகித ஆலையில் பொறியாளராக உள்ள ரகுநாதன் மனைவி, பொறியாளர் திவ்யபாரதி. இவர்களுக்கு புகழ் என்ற 3 வயது மகன் உள்ளார். வீட்டின் சுற்றுச்சுவர் அருகே தண்ணீர் குழாயினை திறக்க சென்ற திவ்யபாரதிக்கு ஏதோ ஊசி குத்தியது போல் வலி ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பூச்சி கிடைத்திருக்கலாம் என நினைத்த அவர் அருகில் கணபதிபாளையம் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.